Monday 30 March 2020

'கொரோனா ' என்ற சொல்லும் தமிழ் தான் !

உலக மொழிகளின் முக்கிய சொற்கள் யாவும் தமிழ் வேர் கொண்டவை தான் என்று 2017 ல் வேர்ச்சொல் ஆராய்ச்சியாளர் அல்வாரோ ஹான்ஸ் எழுதிய நூல் நிரூபித்திருக்கிறது .காண்க :

Proto-Indo-European Language-Face Unveiled ! (Notion Press-2017) By Alvaro Hans https://www.amazon.com/dp/1948096323/ref=sr_1_11?ie=UTF8&qid=1511490750&sr=8-11&keywords=proto+indo+european  
 உலகெங்கும் பயன்படும் சில முக்கிய தமிழ்  சொற்கள்  :
  • ராசா /ஷா /ராய் /ரெக்ஸ் /ஸீசர் /கைசர் /இன்னும் ...
  • ஊர் /அர்பன் /சுமேரியா /இன்னும் ...
  • காசு/கேஷ் /---- 
  • தளம் /தனம் /ஸ்டான் /----
  • இன்னும் இதுபோல பல 
இந்த வரிசையில் இப்போது எங்கும் பேசப்படும் 'கொரோனா 'என்ற சொல்லும் அடங்கும் என்பது பலருக்கு வியப்பை தரலாம் .இதை பற்றி இங்கு விரிவாய்க் காண்போம் .
'கொரோனா 'என்ற சொல்லின் சொல்லப்படும்  வேர் !
'கொரோனா 'என்ற சொல்லின் வேர் என்ன என்று தற்போது சொல்லப்படுகிறது ?
https://www.etymonline.com/search?q=corona+  என்ற ஆங்கில வேர்ச்சொல் அகராதி இவ்வாறாக சொல்கிறது :
corona (n.)

1650s, "a crown," from Latin corona "a crown, a garland," in ancient Rome especially "a crown or garland bestowed for distinguished military service," from suffixed form of PIE root *sker- (2) "to turn, bend."
With many extended senses in botany, anatomy, etc. A coronavirus (by 1969) is so called for the spikes that protrude from its membranes and resemble the tines of a crown or the corona of the sun.
borrowed from Latin corōna "garland worn on the head as a mark of honor or emblem of majesty, halo around a celestial body, top part of an entablature"
மரியம் -வெப்ஸ்டர் அகராதி படி ,இந்த சொல் ஆங்கிலத்தில்  1548 கி .பி .யில் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது .அப்படியானால்  ,அதன் முன் உலகில் அரசர்கள் முடி சூடவில்லையா என்ற பெரும் கேள்வி எழுகிறது .அப்படி சூடியிருந்தால் ,அதற்கு என்ன சொல் பயன்படுத்தப்பட்டது ?
இதன் வேர் லத்தீன் சொல்லான 'கொரோனா 'என்றும் ,அதன் பொருள் 'மலர் மாலை ,வட்ட மாலை ,மலர் வளையம் 'என்றும் சொல்லப்படுகிறது . லத்தீன் மொழியில் இதற்கு சம்பந்தமான வேறு சொற்கள் எதுவும் இல்லை .கிரேக்க /ரோம அரசர்கள் யாரும் மலர் மாலை சூடி அரியாசனம் ஏறுவதில்லை .கிரேக்க/ரோம பண்பாட்டில் மக்கள் மலர் மாலைகள் ,தமிழர் போல் பயன் படுத்தியது இல்லை .வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றவருக்கு கூட  ,ஒலிவ இலை கிரீடமே சூடப்படும் .
(படம் நன்றி  :முஸோ )
இதனால் ,இந்த வேர்ச்சொல் லத்தினிலிருந்து வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள தகுந்த சான்றுகள் இல்லை .
பின்னர் ,உண்மையான வேர்தான் என்ன ?
பண்டைக் காலத்தில் ,மன்னர்கள் முடிசூடும் நிகழ்ச்சி என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல .ஒரு பெரும் கொண்டாட்டமாக நடத்தப்பட்டது .மக்கள் ,செல்வந்தர்கள் ,அரசபை அங்கத்தினர் ,ராஜகுரு ,அமைச்சர்கள் ,ஞானிகள் எல்லோரும் கூடி ,ஒரு ஒழுங்கு முறையாக (Order ) நடத்தப்பட்டது .இதன் முடிவில் ,ராஜ கிரீடம் ராஜாவின் தலையில் சூடப்படும் .இந்த முடிசூட்டும் ஒழுங்கு முறை ,தமிழில் தோரணை என சொல்லப்பட்டது .இந்த தோரணையின் ஒரு பகுதியாக ,ஓவ்வொரு வீட்டின் வாசலிலும் ,மாவிலை தோரணம் ,கொண்டாட்டத்தின் ஒரு குறியாக கட்டப்பட்டது . 
இதற்கு ஆதாரம் இதோ :
அகராதி .காம் 
https://agarathi.com/word/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88 
University of Madras Lexicon

தோரணை

tōraṇai   n. id. Order, arrangement, method, plan, as of a discourse; முறை  
https://agarathi.com/word/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

தோரணம்

tōraṇam
s. Cords hung with gar lands, palm-leaves, &c., or cloth hung up to adorn a road, in honor of an idol, or great person; or to garnish a house for a festivity; or the parts about a temple for an annual ceremony, &c., மகரிகை. 2. An outward door, a porch or ornamented geteway, சித்திரகோபுரவாயில்(c.) 3. A mound raised near a bathing place for a mark, நீராடுமிடத்திற்கட்டும்வரம்பு. W. p. 386. TORAN'A. 4. (R.) The beam of a balance, தராசுதாங்கி.
தோரணக்கல்s. A stone pillar errect ed in a large tank to show the height of the water, நீராழம்அறியுங்கல்.
தோரணக்கால்--தோரணக்கம்பம்s. Pots supporting garlands, &c. See under கால்.
தோரணங்கட்ட-தோரணந்தூக்க--தோ ரணம்போடinf. To make lines and deco rations as ornaments, &c. 2. To hang up a string of mango leaves over the door of a temple, or across the road, as an suspicious sight.
தோரணதீபம்--தோரணவிளக்குs. Torches in a row used at temple pro cession, made of rolls of cloth dipped in oil and hung by wires to a pole extending across the street, உற்சவவிளக்கு.
தோரணவாயில்s. A porch, portico, lodge, &c., நுழைவாயில்.
  ஆக ,மன்னர் மகுடம் சூடும் தோரணையின் ஒரு பகுதியாக தோரணம் கட்டப்பட்டது .இந்த தோரணை என்ற தமிழ் சொல் மருவி 'கொரானா 'என்றாகியது .எப்படி ?
தோரணை >தோரண >கொரன >கொரானா !
இதன் பொருள் ,தோரணத்தோடு தவறாக இணைக்கப்பட்டது .இலை தோரணத்தை ,காலப்போக்கில் மலர் தோரணமாக மருவி நினைக்கப்பட்டது .
லத்தினில் கொரோனா சம்பந்தப்பட்ட வேறு சொற்கள் எதுவும் இல்லாத நிலையில் ,தமிழில் பல சொற்கள் காணப்படுவது ,அது தமிழ் சொல் தான் என்பதை உறுதி செய்கிறது .
இப்போது கூட ,தமிழ் பேச்சு வழக்கில் 'அவன் நிக்கற தோரணையை பாரு !'என்று 'ராஜ தோரணை 'என்ற பொருளில் சொல்வார்கள் .
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் இந்த பதிவை ஒரு 10 பேருக்காவது பகிரவும் .








No comments:

Post a Comment